"வருமான வரித்துறை தினகரனை பணிய வைக்க முயற்சிக்கிறது"

டிடிவி தினகரனை அடிபணிய வைக்க நெருக்கடி அளிக்கும் வகையில் மாநில அரசின் துணையோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினரும்,டிடிவி தினகரன் ஆதரவாளருமான ஏ.பி. நாகராஜ் கோவில்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது பேசிய அவர்,தமிழ்நாட்டில் அம்மா பிம்பத்தை சிதைக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக அதிமுக பிளவுபடுத்தப்பட்டதாகவும், அதிமுக கட்சியை அழிக்கும் நடவடிக்கைக்கு பலரும் துணை போனதாகவும் தெரிவித்தார்.

சசிகலா குடும்பம் இருந்தால் கட்சி பலப்பட்டு விடும் என்பதாலும், சசிகலா ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதிமுக பிளவுபட்டு விடுமென்பதாலும்,தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறிய அவர், நீதித்துறையை தவிர்த்த அனைத்து துறைகளும் அரசின் கைப்பாவைகளாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

கடந்த ஒராண்டில் பல வருமான வரித்துறை சோதனைகள் நடந்தாலும், வேண்டப்பட்டவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறிய அவர், சேகர்ரெட்டி உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட சோதனை எதற்காக நடத்தப்பட்டது? என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.

இந்த வருமான வரித்துறை சோதனை மாநில அரசின் துணையோடு நடைபெறுவதாகவும், டிடிவி தினகரனை அடிபணிய வைக்க நெருக்கடி அளிக்கப்பட்டு வருவதாகவும், வருமான வரித்துறை மிரட்டலுக்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது எனவும் நாகராஜ் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை கைப்பற்றும் முயற்சியாக கூட இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...